Poems

ஆகாத தேவதை

பொட்டுத்தான் முதலில் காய்ச்சினேன்
பிறகு மெல்லிய வாசனைகொண்ட
கொடி முல்லையும் மஞ்சளும்
நட்டு வைத்தேன்
 
பச்சை மஞ்சள் நீலம் ஊதா என்று
வண்ணத்தில் பச்சை குத்தி
பட்டாம்பூச்சிகள் வீடெங்கும்
பறந்து பறந்து
இசை எங்கும் நிறைந்தது
 
ஒவ்வொரு கணமும்
உன்னைச் சுற்றியே
 
உன்னைச் சுற்றியே நான் வளர்ந்து
கொண்டிருந்தபோது
நீ சொன்னாய்
உயிர்க்கும்
எல்லா உயிர்களும்
மண்தொடுவதில்லை
 
ஆமாம்
நீ தேவதையாய்
ஆக மாட்டாய்
 
ஊரில் பேசிக்கொள்கிறார்கள்