ஞானதீபன் வந்தவுடனேயே ஒருவனைக் கொன்று விடுகிறான் எந்த ஆண்டு வந்தான்? ஜோர்மனியா? பிரான்ஸா? எதுவும் தெரியவில்லை, தெரிவதெல்லாம் வந்தவுடனேயே ஒருவனைக் கொன்றுவிடுகிறான் அவனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது கொன்றுவிடுகிறான் பின்னர்; பின்னர் எதுவுமில்லை கொல்லப்பட்டவன் தமிழனாயும் வெள்ளைக்காரனாயும் இரண்டு உருவங்களில் அவனுக்குத் தெரிகிறான் இருவரையும் அழைத்துக் கொண்டு பொலிஸிற்க்குப் போகிறான் அகதிக்காக விண்ணப்பிக்க. “ஐயா! எனது காலத்துக்கால இடப் பெயர்வுகளையும் சித்திரவதைகளையும் உயிராபத்துகளையும் மற்றும் கஸ்ர-நஸ்ரங்களையும் எங்கிருந்து எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை………”